நடிகை சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து – நாக அர்ஜுனாவின் வைரல் பதிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரது பிரிவு குறித்து தற்போது நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாக அர்ஜுனா ஒரு ட்வீட் செய்துள்ளார். இருவரது பிரிவு குறித்த முடிவும் அவர்கள் எடுத்து கொண்ட தனிப்பட்ட முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமந்தா விவாகரத்து
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் இருவருமே நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர் என்று தான் கூற வேண்டும். சமந்தா திருமணத்திற்கு பின்னர் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரும் அவரது கணவர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ இல் கலந்து கொள்ளும் 4 போட்டியாளர்கள் விபரம் – உறுதியான பட்டியல்!
ஆனால், இதனை இருவருமே மறுத்து வந்தனர். இப்படியான சுழலில், நேற்று சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தாங்கள் ஒரு மனதாக பிரிய இருப்பதாக தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இதற்கான காரணங்களை இருவருமே தெரிவிக்கவில்லை. இதனால் பலரும் தாங்களாக யூகித்த காரணங்களை கூறி வருகின்றனர்.
எழில் & அம்ரிதாவை சேர்த்து வைக்கும் பாக்கியா – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!!
தற்போது நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாக அர்ஜுனா இருவரது பிரிவு குறித்த ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘கனத்த இதயத்தோடு இதை இங்கு தெரிவித்து கொள்கிறேன். சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே நடந்த விஷயம் துரதிருஷ்டவசமானது. கணவன் மனைவிக்கு இடையே என்ன நடக்கிறது என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். அவர்கள் இருவருமே எனது அன்பானவர்கள் தான். நடிகை சமந்தாவுடன் கழித்த தருணங்களை என் குடும்பம் எப்போதும் போற்றும். அதனை எப்போதுமே மறக்க மாட்டோம். இருவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.