‘சிட்டில பெரிய டாக்டர் பாரதி, இது கூட தெரியாம இருக்காரே’ – பாரதி கண்ணம்மாவை கலாய்க்கும் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் பல வித ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியலில் அடுத்து அடுத்து நடக்கும் காட்சிகளை வைத்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியல் ஆரம்பத்தில் அவ்வளவு புகழ் அடைந்ததா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பின்னர், கதாநாயகி கண்ணம்மா தன்னை தனது கணவர் சந்தேகம் அடைந்தது தெரிந்து கோபம் அடைத்து வீட்டை விட்டு வெளியே போவார். அந்த எபிசோடிற்கு பிறகு தான் இந்த சீரியல் டாப் லெவல் ஹிட் அடித்தது.
விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ இல் கலந்து கொள்ளும் 4 போட்டியாளர்கள் விபரம் – உறுதியான பட்டியல்!
சிட்டியில் மிக பெரிய டாக்டராக இருக்கும் பாரதிக்கு தானே சென்று தான் ஆண்மையற்றவரா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள கூடவா தெரியாது என்று பாரதியை கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். இது ஒரு புறம் இருந்தாலும், இந்த அப்பாவி டாக்டரை விரும்பும் வெண்பா பற்றி என்ன சொல்லுவது. டாக்டர் என்பவர் உயிரை காப்பாற்றுபவர், ஆனால் டாக்டர் வெண்பா ஒருவரை எப்படியெல்லாம் கொலை செய்யலாம் என்பது பற்றி மட்டும் தான் சிந்திக்கிறார்.
எழில் & அம்ரிதாவை சேர்த்து வைக்கும் பாக்கியா – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!!
அது கூட பரவாயில்லை, திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான பாரதியை இன்று வரை விரும்பும் அவரை என்னவென்று சொல்வது என்று ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். சீரியல் என்றால் ஒரு அளவிற்கு தான் லாஜிக் மிஸ் ஆக வேண்டும். ஆனால், பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்துமே லாஜிக் தாண்டி தான் இருக்கிறது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இது இப்படியாக இருந்தாலும், சீரியலுக்கான ரசிகர்கள் தொடர்ந்து சீரியலுக்கு ஆதரவு தெரிவித்து தான் வருகின்றனர்.
It is allways better show in serials though it is imaginary How the womens should handle the situation.Here logicless .It should be like this Kannamma should approach HumanRights to ask Bharathi to take DNA Test since it is her Right ,she knows what is true.Then only Kannamma like women will understand they can go to HumanRights.
It’s not focused misleading ,it’s questinable what happened to Durga after escaped from venbas custody,what happen to the case of kidnapping by venba ,and wondering how can venba can put plaster on the Kannada s mouth and so on otherwise this serial is more intresting.