தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழக பள்ளிகளில் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் கல்வி தொலைக்காட்சி / ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் மாணவர்களுக்கு இவ்வகை கல்வியில் அதிகளவு ஈடுபாடு இல்லாத காரணத்தால் பலரும் படிப்பை உதறிவிட்டு பணிக்கு செல்ல தொடங்கினர். கொரோனா ஊரடங்கால் வீடுகளில் ஏற்பட்ட வருமான இழப்பும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மறுபுறம் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
நவ.1 முதல் 1 – 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | அக்.18 முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள்!
மேலும் பள்ளிக்கு வருகை புரிந்த சில ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சுழற்சி முறையில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக நவம்பர் 1 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு சில அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பிற்கான முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘இனி’ சம்பளம் கிடையாது – லஞ்சம், போக்சோ வழக்குகளில் சிக்கினால்!
இந்நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரி உள்ளனர். கொரோனா தடுப்பு வழிமுறைகள், தேர்வுகள், வகுப்புகள் என மாணவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலை குறைக்க இது உதவும் என தெரிவித்து உள்ளனர்.