தமிழகத்தில் மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் “எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம்” கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க ரேஷன் கடை பணியாளர்கள் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம்:
இந்திய குடிமகனின் முக்கிய முதல் ஆவணம் ரேஷன் கார்டு ஆகும். இந்த வகையில் இந்தியா முழுவதும் எந்த மாநில கார்டுதாரர்களும், தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம், 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வசிக்கும் கார்டுதாரர்கள், தங்கள் வார்டு அல்லது கிராமத்தை தவிர்த்து வேறு எந்த பகுதிக்கு இடம் பெயர்ந்தாலும், கார்டுதாரர்கள் இடம் பெயர்ந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் திட்டமும் துவக்கப்பட்டது.
பிப்.7 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ஜனவரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் புதிதாக துவங்கப்பட்ட “எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம்” தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், கார்டுதாரர்களுக்கு, அவர்களுக்கு ஒதுக்கிய கடைகளில் மட்டுமே, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது, இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்தால், மீண்டும் எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நேரடி முறையில் தேர்வு! முழு விபரம் இதோ!
இந்த அறிவிப்பு அடிப்படையில் ரேஷன் கார்டுதாரர்கள் எந்த கடையிலும் ரேஷன் பொருட்களை வாங்க சென்ற போது, ரேஷன் கடை பணியாளர்கள் உணவு பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் ரேஷன் கார்டுதாரர்கள் புகார் அளிக்கலாம். மேலும் பொருட்களை தர மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என உணவுத்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.