பிப்.7 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!

0
பிப்.7 முதல் 9 - 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி - மாநில அரசு உத்தரவு!
பிப்.7 முதல் 9 - 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி - மாநில அரசு உத்தரவு!
பிப்.7 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

உலகில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் 3 ஆம் அலையின் துவக்கமாக கொரோனா புது உருவமான ஓமைக்ரான் தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் பிப்.19க்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு? வெளியான ஷாக் தகவல்! அரசின் முடிவு என்ன?

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலும் நோய் தொற்று குறைந்து காணப்பட்டதால் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று நடைபெற்ற டிடிஎம்ஏ கூட்டத்தின் போது டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பிப்ரவரி 7 தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் மேலும் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

5 வது முறை உலக கோப்பையை வெல்லுமா இந்திய U19 அணி? இன்று பைனலில் இங்கிலாந்துடன் மோதல்!

இதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை டெல்லி மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அரசு உத்தரவிட்ட தேதியில் மீண்டும் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் வளாகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்தும் ,சமூக இடைவெளியை பின்பற்றியும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!