மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – ஜாக்பாட் அறிவிப்பு!
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.
ஓய்வூதியத் திட்டம்
நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் ஒரு முக்கிய விஷயம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்துவது தான். இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி தான் இன்றும் (மார்ச்.29) கூட நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் குளறுபடி – பயனர்கள் அதிர்ச்சி!
இதனுடன் மற்ற மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது OPSஐ அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் பொதுமக்களுக்கான சில சிறப்பு திட்டங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
இந்த முடிவு தற்போது மாநில அரசு ஊழியர்களிடையே வரவேற்புகளை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை’ என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.