தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் குளறுபடி – பயனர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியான பலர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கையெழுத்திட்டு அதை திட்டமாக செயல்படுத்தினார். அதில் மகளிர் இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் பெற்ற தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததையும் நிறைவேற்றும் வகையில் அதற்குரிய பணிகள் நடைபெறத் தொடங்கியது.
ஏப்ரல் 5 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி உத்தரவு!
நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு தற்போது வரை பல எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் 5 பவுனுக்கு மிகாமல் நகை அடகு வைத்திருந்ததில் தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெறத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியான பலர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. கடலூர் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 40 கிராமிற்கும் குறைவான எடையுள்ள நகைகளை வைத்து கடன் பெற்ற ஒருவரின் பெயரை தகுதியானோர் பட்டியலில் இல்லை என்று இத்துறை குறித்து கேள்வி எழுப்பட்ட போது அவரின் ஆதார் எண் தவறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது போன்ற சில காரணங்களால் தகுதியானோர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.