ஏப்ரல் 5 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி உத்தரவு!
கொரோனா பாதிப்பு தற்போது தான் ஓரளவுக்கு குறைந்துள்ளது என மக்கள் பெருமூச்சு விட்ட சமயத்தில் மீண்டும் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பரவ ஆரம்பமாகியுள்ளது. இதனால் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கொரோனா பாதிப்பு சற்று குறைய ஆரம்பித்துள்ளது. பொது மக்களும் தங்களது அன்றாட வேலையை செய்ய கிளம்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பரவ ஆரம்பமாகியுள்ளது. ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லாமல் அனைவரும் குணமான நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சீனாவில் உள்ள சாங்சுன், ஜலின் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த நகரங்களில் முழு ஊரடங்கை சீன அரசு பிறப்பித்துள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மேலும், சீனாவில் உள்ள மற்றொரு பெரிய நகரமான ஷாங்காயில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாகி கொண்டே செல்கிறது. இதனால் நேற்றில் இருந்து கிட்டத்தட்ட ஒன்பது நாட்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் மட்டும் கிட்டதட்ட 2.6 கோடி மக்கள் வசித்து வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், ஷாங்காய் நகரில் போக்குவரத்து வசதியும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே ஷாங்காய் நகரில் 3,470 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவி விடுமோ என மற்ற நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும், கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.