தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசினார்கள், இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
முக்கிய தகவல் :
தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இம் மாதம் 6ம் தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்துள்ளது. கடந்த சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால், சட்டசபை கூட்டம் நடக்கவில்லை. விடுமுறைக்கு பின் சட்டசபை நேற்று மீண்டும் நடந்தது. இந்த கூட்டத்தில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இதில், எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை, உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வெளியிட்டனர்.
தமிழக அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – ரூ.1000 ஊக்கத்தொகை!
திமுக தேர்தல் வாக்குறுதி 181 ன் படி 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டைவிட 4300 கோடி ரூபாய் அதிகமாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 300 கோடி ஒதுக்கினாலே இந்த 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய போதுமானது என்று சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். எனவே அதற்கான அறிவிப்புகள் வராத நிலையில் இந்த விவாத கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார்.