தமிழக அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – ரூ.1000 ஊக்கத்தொகை!

0
தமிழக அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு - ரூ.1000 ஊக்கத்தொகை!
தமிழக அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு - ரூ.1000 ஊக்கத்தொகை!
தமிழக அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – ரூ.1000 ஊக்கத்தொகை!

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18ம் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக அரசு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இதில் அரசு பள்ளியில் படித்த முடித்த மாணவிகள் உயர்கல்வித்துறையில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18ம் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக அரசு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பட்ஜெட் மீதான விவாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகளை விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்காக கடந்த 6ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று உயர் கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உரிய பதில் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்து முடித்த உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வரை வழங்குவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இதில் 2 லட்ச மாணவிகள் மட்டுமே பயன் பெற முடியும் என்றும் இதனை ஆதிதிராவிடர், பிரமலைக்கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள், பட்டியல் இன மாணவிகள் உள்ளிட்டவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தாவது, இந்த திட்டம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு சேரும் மாணவிகளுக்கும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதில் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!