ஓய்வூதிய திட்டத்தில் அமலாகும் மாற்றங்கள் – அரசின் திட்டம் என்ன?
அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக தற்போது அரசின் முடிவு குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பென்ஷன் திட்டம்:
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் நீண்ட காலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு மத்திய அரசு டி.வி சோமநாதன் அவர்களின் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. அறிக்கையின் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் அடிப்படையில் இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் இறுதி முடிவுகளை அறிவிக்க உள்ளார்.
ஏப்ரலில் 1766 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு – TRB வாரியம் அறிவிப்பு!
வெளியான தகவல்களின்படி சோமநாதன் தலைமையிலான குழு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கவில்லை என்றும், அதே நேரம் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களை பரிந்துரை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவுள்ள தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசு மாற்றங்களை அறிவித்தாலும், இதனை அமல்படுத்துவதற்கு கால தாமதங்கள் ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.