நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 10,11 ஆகிய இரு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
விடுமுறை :
புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழக முறையை பின்பற்றி புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 8 ம் தேதி முதல் அடுத்த கட்டமாக 1 – 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
நாளை (நவ.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் வர ,முடியாத சூழலில் உள்ளனர். இதனால் அறிவிக்கப்பட்டபடி தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000, இலவச பொருட்கள் – அரசு பரிசீலனை!
புதுச்சேரிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 10, 11 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.