நாளை (நவ.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (10.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விடுமுறை:
தமிழகத்தில் அரசின் முயற்சியாலும் தடுப்பூசி பயன்பாட்டாலும் கொரோனா தாக்கம் குறைந்து வந்தது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் மீண்டும் வேலைகளுக்கு செல்ல தொடங்கி வருகின்றனர். மேலும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு பள்ளி, மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் வழக்கம் போல பள்ளிகளுக்கு செல்லும் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000, இலவச பொருட்கள் – அரசு பரிசீலனை!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னையில் காணும் இடத்தில் எல்லாம் மழை நீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கிய உள்ள நீர் தேக்கங்களால் போது மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறையை அறிவித்து வருகின்றனர். திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.