முதியோர் ஓய்வூதியங்களை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கில் தற்போது அதிரடி தீர்ப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
முதியோர் ஓய்வூதியம்:
ஆந்திர பிரதேச அரசு மாநிலத்தில் உள்ள முதியோர்கள், விதவைகள், கல்வெட்டுபவர்கள், நெசவாளர்கள், ஒற்றைப் பெண்கள், மீனவர்கள், எச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்கள், பாரம்பரிய செருப்பு தொழிலாளிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியவர்களுக்கு வழங்கும் ஓய்வூதிய தொகையை ரூபாய் 3000 ஆக உயர்த்தி டிசம்பர் 21ஆம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது, உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் புதிதாக வந்துள்ள அரசு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிட்டுள்ளது.
வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – இனி UPI மட்டுமே போதும்!!
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நீதிபதி சந்திர சூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முதியோர் ஓய்வூதியம் வழங்குவதற்கு சட்டத்தின் கீழ் அரசுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்குமாறு நீதித்துறையால் மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் சமூக நலத்திட்டங்களுக்கு செலவுகளை செய்யும் மாநில அரசின் செலுத்தும் திறனை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் மாநில அரசுகள் முதியோர் ஓய்வூதியம் வழங்க கட்டுப்படுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.