பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இனி நேர்முகத்தேர்வு கிடையாது – ஆசிரியர் தகுதி வாரியம் அறிவிப்பு!
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு கிடையாது எனவும், எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வு:
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதாவது, தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் தகுதித் தேர்வின் அடிப்படையில் தான் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள 10,331 பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மேலும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கூட போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தான் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மேலும், பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. பின்னர், தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வரும் ஜூலை 16, 17, 18 ஆகிய மூன்று தேதிகளில் சரிபார்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என ஆசிரியர் தகுதி வாரியம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, எழுத்து தேர்வில் தேர்வாளர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் பணியிடம் நியமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படும் தேர்வாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விரிவுரையாளர் பணியிடங்கள் குறித்தான வேறு எந்த தகவல் வந்தாலும் அதனை நம்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.