தமிழகத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் ஆடித்தவசு திருவிழா வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் ஆடி மாதம் வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க இருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருவிழாக்கள் குறித்து அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சங்கரநாராயன் கோவிலில் ஆடித்தவசு திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ஜெனி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆடித்தவசு திருவிழா நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பதால் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதனால் தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தேதியில் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.