கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ஜெனி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி செய்த காரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் கோபியின் செயல் பிடிக்காமல் ஜெனி அவரை வெளியே போக சொல்ல போகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா உறவு பற்றியும், பாக்கியாவிற்கு கோபி செய்த அநியாயம் பற்றியும் எல்லா உண்மையும் தெரிந்துவிடுகிறது. அதனால் கொந்தளித்த பாக்கியா கோபியின் அனைத்து மோசடிகள் பற்றி குடும்பத்தில் அனைவர் முன்னிலையும் சொல்லிவிடுகிறார். அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமில்லாமல் பாக்கியாவை ஏமாற்றி கோர்ட்டிற்கு அழைத்து சென்று விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய உண்மையையும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
ராதிகாவிற்காகத் தான் இதெல்லாம் செய்தார் என்ற உண்மையை தெரிந்து குடும்பத்தில் அனைவரும் மன வேதனை அடைகின்றனர். கோபி மீது பாசமாக இருந்து பல முறை கோபிக்காக பாக்கியாவை அவமானப்படுத்திய செழியன் மற்றும் இனியா கூட கோபியின் இந்த மோசமான செயலை நினைத்து வருத்தப்படுகின்றனர். பாக்கியா மீது அவர்களுக்கு அனுதாபம் வருகிறது. இதெல்லாம் கேட்டு கோபி திருந்தி விடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் பாக்கியா வெளியே சென்றதால் ஜெனி பாட்டி தாத்தாவிற்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக் கொள்கிறார். அவருக்கு கோபியை பார்க்க கூட பிடிக்காமல் இருக்கிறது. பாக்கியா வீட்டை விட்டு வெளியே சென்றாலும் கண்டிப்பாக வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் ஜெனி இருக்கிறார். இந்நிலையில் கோபியிடம் ஜெனி பேச ஆன்டி எவ்வளவு நல்லவங்க அவங்களுக்கு இப்படி துரோகம் செய்ய எப்படி மனது வந்தது என கேள்வி கேட்கிறார். கோபியை வீட்டை விட்டு ஜெனி வெளியே போக சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் கோபி, இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.