5 கோடி வேலை வாய்ப்பு- நிதின்கட்கரி அறிவிப்பு!!!
சிறு குறு நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதன் மூலம் நாட்டில் 5 வருடங்களில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
வேலை வாய்ப்புகள்:
நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. அதன் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை மூலமான ஜிடிபி பங்களிப்பு 50 சதவீதமாக உயரும். இதன் விளைவாக அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க முடியும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு!!
தற்போது ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ-க்களின் பங்கு 48 சதவீதமாக உள்ளது. இதுவரை இத்துறை மூலம் 11 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஏற்றுமதியை போல் வெளிநாடுகளில் இருந்து வரும் இறக்குமதி பொருள்களை தவிர்க்கவும் அதற்கு மாற்று பொருள் என்ன என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டும. அதே நேரத்தில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். நாட்டில் அந்நிய பெருகுவதால் தொழில்நுடபத்தில் மாற்றங்கள் செய்யலாம். தொழில்நுட்ப மேம்பாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கொரோனா நோய் பரவல் காரணமாக பதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு பல கொள்கைகளை மேற்கொண்டு வருகிறது என் குறிப்பிட்டார். மேலும் சாலை மேம்பாட்டு துறையில் ரூ.25 லட்சம் முதலீட்டை அரசு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தார். சுங்க சாவடிகளில் வசூலிக்கப்பட்ட வருமானம் நடப்பு ஆண்டில் ரூ.34000 கோடி உயரும் என குறிப்பிட்டார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்