2வது திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் ரக்ஷிதா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பிரபலமான ரக்ஷிதாவும் அவரது காதல் கணவரான தினேஷ் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தான் விவாகரத்து பெற்றனர். தற்போது ரக்ஷிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்கிற விஷயம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரக்ஷிதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான ஆதரவைப் பெற்றவர் தான் ரக்ஷிதா. சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்துக்கொண்டிருந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இதற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவரும் இணைந்தே சில சீரியல்களில் நடித்திருக்கின்றனர்.
கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா – கேள்விக்குறியாகும் பாக்கியாவின் வாழ்க்கை! ப்ரோமோ ரிலீஸ்!
இந்த சீரியல்களை தொடர்ந்து ரக்ஷிதா விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் தொடரில் நடித்து வந்தார். பின்பு சீரியலில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என கூறி திடீரென சீரியலில் இருந்து விலகினார். பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொல்ல மறந்த கதை என்கிற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடித்து வருகிறார்.
ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருமே காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை சுமூகமாக சென்றாலும் கூட இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். ஒரு சில நாட்களாகவே கூடுதலாக ரக்ஷிதா சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
Exams Daily Mobile App Download
அதுவும் கணவனை விவாகரத்து செய்த சோகம் கூட இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், ரக்ஷிதா கூடிய விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்பது குறித்தான தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதுவும் ரக்ஷிதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்பவர் ஒரு இயக்குனர் என்பதும் தெரிய வந்துள்ளது.