கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா – கேள்விக்குறியாகும் பாக்கியாவின் வாழ்க்கை! ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை ராதிகா வீட்டை விட்டு வெளியே விரட்டியதால் ராஜேஷ் அடிக்கடி ராதிகாவின் வீட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் மீண்டும் கோபியை ராதிகா ஏற்றுக்கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மீண்டும் ஏற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரிய வந்ததுமே முழுவதுமாக கோபியை விட்டு விலகி விடலாம் என ராதிகா நினைக்கிறார். ஆனாலும், கோபி ராதிகாவை விட்டு விலகுவதாக இல்லை. அப்போது ராதிகாவின் வீட்டிற்கு வந்து மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு கெஞ்சி கொண்டிருக்கிறார்.
சன் டிவியின் பிரபல ‘கயல்’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!
இவர் எவ்வளவு விரட்டினாலும் தன்னை விட்டுப் போகவே மாட்டாரா என்கிற கோபத்தில் கோபியை பிடித்து ராதிகா வீட்டை விட்டு வெளியே தள்ளிகிறார்.இதனை ராஜேஷ் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறார். நான் இருக்கும்போது கோபிக்காக என்னைவிட்டு விலகி சென்றாய். தற்போது வேறு எவனோ ஒருத்தனுக்காக கோபியை விட்டு விலக நினைக்கிறாயா என ராதிகாவை கண்டபடி ராஜேஷ் திட்டமிடுகிறார். உடனே கோபிக்கு கோவம் வந்து ராஜேஸுடன் சண்டை போட்டு விட்டு கோபத்தில் வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.
Exams Daily Mobile App Download
இதற்கு இடையே வேறு யாரோ ஒருவர் ராதிகாவின் வீட்டிற்கு அடிக்கடி வருவதாகவும், இதனால் மயூவுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி மயூவை தன்னிடம் ஒப்படைக்கும்படி காவல்நிலையத்தில் ராஜேஷ் புகார் கொடுத்திருக்கிறார். இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு ராதிகா தவித்துக் கொண்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் கோபியில் வீட்டிற்கே சென்று ராஜேஷ் கோபியிடம் சண்டை போடுகிறார். இவர் எதற்காக அடிக்கடி இங்கு வந்து சண்டை போட வேண்டும் என பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. இந்நிலையில் ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ள்ளது போலவும், ராதிகாவை கோபி பாசத்துடன் கவனித்து கொள்வது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.