தமிழகத்தில் நர்சிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.65,000 சம்பளத்தில் சவுதியில் வேலை!

0
தமிழகத்தில் நர்சிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ரூ.65,000 சம்பளத்தில் சவுதியில் வேலை!
தமிழகத்தில் நர்சிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ரூ.65,000 சம்பளத்தில் சவுதியில் வேலை!
தமிழகத்தில் நர்சிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.65,000 சம்பளத்தில் சவுதியில் வேலை!

தமிழகத்தில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது சவுதி அரேபியாவில் செவிலியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் வேலை:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் வேலையின்மை அதிகமாக நிலவி வந்தது. கொரோனா பரவலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றது. இருப்பினும் கொரோனா தாக்கத்தால் முகாம்கள் 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டது. தற்போது பதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அரசு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி தரிசனத்திற்கு செல்கிறீர்களா? தேவஸ்தானத்தின் புதிய ஏற்பாடு! பக்தர்கள் நிம்மதி!

இந்நிலையில் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சவுதி அரேபியாவில் செவிலியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, சவுதி அரேபியாவில் பணிபுரிய, செவிலியர் எனப்படும் நர்சிங் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் பணியாற்ற குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள, ஆண் மற்றும் பெண் செவிலியர்களுக்கான காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்களின் சுய விபரம் (resume) அடங்கிய விண்ணப்ப படிவம், தகுதிச் சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றை, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஸ்கைப் (Skype) மூலமாக நேர்க்காணல் நடைபெறும்.  இந்த பணிக்கு ரூ.65,000 முதல் ரூ.75,000 வரை சம்பளமாக வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை 17-க்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை தரும் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும்.  இதுகுறித்த முழு விவரங்களை https://www.omcmanpower.com/jobInfo.php?jid=278 என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!