திருப்பதி தரிசனத்திற்கு செல்கிறீர்களா? தேவஸ்தானத்தின் புதிய ஏற்பாடு! பக்தர்கள் நிம்மதி!
திருப்பதி கோயிலில் கடந்த மாதம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் மக்கள் அதிக நேரம் காத்திருக்கும் சூழல் உண்டாகியுள்ளது. இதனால் தேவஸ்தானம் தற்போது புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
புதிய ஏற்பாடு:
திருப்பதி கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள். ஆனால் கொரோனா கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த 2 வருடங்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் குறித்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஜூன் 20) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதிலும், கோடை விடுமுறை காலத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கிட்டத்தட்ட 48 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியதிருந்தது. இதனால் கோயில் நிர்வாகம் இலவச டிக்கெட்டுகளை ரத்து செய்தது. இதன் பின்னர் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. அதன்பிறகு தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது. தற்போது பக்தர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போதும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக இரவு, பகலாக காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவைகள் தேவஸ்தானம் சார்பில் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கீட்டு முறையில் ஆக்சிஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு என்று குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக வந்து தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருப்பதி கோயிலில் நேற்று நிலவரப்படி 84,982 பேர் தரிசனம் செய்தனர். 46,679 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ரூ 4.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.