
நீலகிரியில் தொடரும் கடையடைப்பு போராட்டம்.. கோடிக்கணக்கில் ஏற்பட்ட வருவாய் இழப்பு.. அவதிகுள்ளன சுற்றுலா பயணிகள்..!!
சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவின் படி நீலகிரியில் வார நாட்களில் 6000 வாகனங்களும், வாரயிறுதியில் 8000 வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் நடைமுறையின்படி அனுமதி அளிக்கப்படும் என்ற விதியானது நேற்று (02-03-2025) அமலுக்கு வந்தது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வணிகர் சங்க அமைப்பு சார்பில் 24 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து கடைகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் உட்பட பல்வேறு சேவைகள் இயங்காததால் நகர் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!! எப்போன்னு தெரியுமா…?? இதோ உங்களுக்காக
இந்நிலையில் “நீலகிரியில் நேற்று வணிகர்கள் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அப்பகுதியை சார்ந்த மக்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது”.

























