தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – இந்த 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை:
தமிழகத்தில் தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உதவித்தொகையுடன் Machinist வேலை || முழு விவரங்களுடன்!
அந்த வகையில் நேற்று மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.அதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பெய்யும் மழை வெப்பத்தை தணிந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.