EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – விரைவில் வெளியாக உள்ள ஹாப்பி நியூஸ்!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கு மூலம் பல பணியாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இபிஎஃப் வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டித் தொகையானது, பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
EPFO அமைப்பு:
இந்திய ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO-வில் இருக்கும் ஐந்து கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கு வைப்பு நிதிக்கு 40 வருட குறைவான 8.1 சதவீத வைப்பு நிதியை மட்டுமே அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2021-22 க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 இல் வழங்கப்பட்ட 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டித் தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, எனினும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. EPFO அமைப்பு வட்டி விகிதம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ள இபிஎஃப்ஓ அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் SMS , ஆன்லைன், மிஸ்டு கால், உமங் செயலி என பல்வேறு வழிகளில் ஒருவர், தனது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.