தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய அப்டேட் இதோ!

0
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - புதிய அப்டேட் இதோ!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - புதிய அப்டேட் இதோ!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய அப்டேட் இதோ!

தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்து உள்ளவர்கள் ஏதேனும் சூழ்நிலையில் தங்களின் ரேஷன் கார்டுகளை தொலைத்து விட்டால் அதை எவ்வாறு மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் தற்போது ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக மாறி விட்டது. மேலும் இந்த கார்டுகள் மூலம் சாமானிய மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, தற்போது சென்ற வருடம் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பல நன்மைகளை செய்து வருகிறது. மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று இருந்த காரணத்தினால் பொதுமக்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். அதனால் மக்களுக்கு உதவுமாறு இரு தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் தற்போது இந்த முக்கிய ஆவணமான ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா உடனே ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழே விவரமாக பார்ப்போம். தொலைத்தவர்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் இந்த வேலையை வெறும் 20 நிமிடத்தில் முடித்து விடலாம். அதற்கான படிகளாக, 1. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://www.tnpds.gov.in/ சென்று லாகின் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, இப்போது பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.

Exams Daily Mobile App Download

TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். மேலும் இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் அதில் உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அடுத்தாக, தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!