தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேற்றில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 முதல் துவங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த பள்ளியும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் நடத்தப்பட்டு வந்தது. மேலும், இந்த இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

Exams Daily Mobile App Download

இந்தாண்டு கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி சமீபத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றில் இருந்து பொதுத்தேர்வு துவங்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளதால் பதட்டத்தில் இருந்தனர். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வரும் மே 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

தமிழகத்தில் நாளை மறுநாள் ( மே 8) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் – சுகாதாரத்துறை அறிவிப்பு!

மேலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 9 ஆம் தேதி பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 53 சிறைவாசிகளும் எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தமாக 8.22 லட்சம் பேர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். மேலும், முதல் நாளிலேயே 32,674 பேர் பொதுத்தேர்வு எழுதாமல் விடுப்பு எடுத்துள்ளனர். இதனையடுத்து, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!