அக்டோபர் 15 முதல் மாறப்போகும் ரூல்ஸ் – சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எவ்ளோ இருக்கனும் தெரியுமா?
பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வங்கிகளில் பணம் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில வங்கிகளில் சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு வங்கிக் கடன் முதல் மருத்துவச் செலவு வரை சேமிப்பைக் காட்டி வங்கிகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்து ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அமல்படுத்த உள்ளது. இந்த அக்டோபர் 15 முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாதம் 5,000 முதலீடு செய்தால் 3.5 கோடி ரிட்டன்ஸா – அசத்தலான திட்டம் இதோ!
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பூஜ்ஜிய இருப்பு கணக்குகளை வழங்குகிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.250, ரூ.500, ரூ.1000 ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். கணக்கு திறக்கும்போது காசோலை புத்தகம் பெறவில்லை என்றால், ரூ.100, ரூ.250, ரூ.500 ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். எச்டிஎஃப்சி வங்கி பூஜ்ஜிய இருப்பு கணக்குகளைத் திறக்காது. இந்த வங்கியில் கணக்கு திறக்க, கிராமப்புற கிளைகளில் குறைந்தபட்சம் ரூ.2500 டெபாசிட் செய்ய வேண்டும். கிராமப்புறம், புறநகர்ப்பகுதி, நகர்ப்புற பகுதிகள் பொறுத்து ரூ.1000, ரூ.2000, ரூ.5000, ரூ.10000 ஆகியவற்றை குறைந்தபட்ச இருப்புத் தொகையாகப் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதிக்கு பின் என்னென்ன மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியும்.


























