விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ ஆலியா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புது சந்தியா – ரியாவின் பதிலடி பதிவு!
விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் பங்கு பெரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி 2. இதில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா தற்போது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள நிலையில் தொடரை விட்டு விலகியுள்ளார். அதற்கு பதிலாக நடிகை ரியா சந்தியா இடத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளதை தொடர்ந்து அவர் கூறிய தகவல் ஆலியா ரசிகர்களை அதிர்ச்சியாக்கி யுள்ளது.
சந்தியாவாக இனி ரியா :
விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 ல் ஆலியா படித்த பெண்ணாகவும் சித்து படிக்காத ஸ்வீட் கடை நடத்துபவராகவும், இவர்கள் இருவரையும் சந்தர்ப்ப சூழ்நிலை கல்யாணம் என்ற பந்தத்துக்கு முடிச்சு போட்டு விடுகிறது. சந்தியா மாமியாரை பொறுத்தவரை தனது மருமகள் வீட்டிற்கு நல்ல மருமகளாகவும், தனது மகனுக்கு நல்ல மனைவியாகவும், தனது குழந்தைகளுக்கு நல்ல அண்ணியாகவும் இருக்க வேண்டும். ஆனால் தனது மனைவியின் ஆசை போலீஸ் அதிகாரி ஆவது என்பதை அறிந்து கொண்ட கணவர் சரவணன் அவரின் ஆசையை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார்.
அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இனி ஒரே மாதிரியான சீருடை!
இதற்கு முன்பு மெகா ஹிட் கொடுத்த ராஜா ராணி சீரியலில் வேலைக்காரப் பெண்ணாக வந்த ஆலியா செம்பருத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் அவர்களையே நிஜ வாழ்க்கையிலும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்கும் அழகான ஒரு பெண் குழந்தையும் தற்போது உள்ளது. தனது குழந்தை பிறப்பிற்கு பின்னர் இவர் ராஜா ராணி 2 சீரியலிலும் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். தொடரில் உள்ள போது இரண்டாவது முறை கர்ப்பமாகி வயிற்றில் குழந்தையுடன் நடித்து வந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதால் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக மாடல் நடிகை ரியா அவர்கள் சந்தியா கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமாகியுள்ள நிலையில் ஆலியாவின் ரசிகர்கள் புதிய சந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஒரு பக்கம் நீங்கள் தற்காலிகமாகத்தான் ஆலியாவுக்கு பதிலாக நடிக்கிறீர்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்து மனதை தேற்றிக் கொண்டு வந்தார்கள். ஆனால் தற்போது ரியா பதில் கொடுக்கும் வகையில் ‘சாரி’ நான் தான் இனி சந்தியாவாக எப்பொழுதும் என்ற அர்த்தத்தில் ‘பெர்மனெண்ட் ‘ என்று விளக்கம் கொடுத்துள்ளார். இதனால் ஆலியா ரசிகர்கள் ஆழந்த சோகத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.