அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இனி ஒரே மாதிரியான சீருடை!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இனி ஒரே வண்ணக் குறியீடு கொண்ட சீருடை அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அதனுடன் மாநில அரசின் சின்னத்தை பொறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீருடை மாற்றம்:
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பள்ளி சீருடைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இனிமேல், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒரே வண்ணக் குறியீடு கொண்ட சீருடை மற்றும் மாநில அரசின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசுப் பள்ளிகளுக்கான இந்த புதிய முயற்சியின் கீழ், அனைவருக்கும் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் ஆடை இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் அதில் மாநில அரசின் சின்னமான பிஸ்வா பங்களாவின் புகைப்படமும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, ‘சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான சீருடை இனி புதிய முறையில் இருக்கும். அதன் படி ஆண்களுக்கு, வெள்ளை சட்டை மற்றும் நீல நிற பேன்ட் ஆகியவை பெரும்பாலான வகுப்புகளுக்கு விதிமுறையாக இருக்கும். பெண்களுக்கு வெள்ளைச் சட்டை, நீல-நீல ட்யூனிக் ஃபிராக் அல்லது வெள்ளை மற்றும் நீல நீல சல்வார்-கமீஸ் ஆகியவை தேர்வு செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு – ராமதாஸ் வலியுறுத்தல்!
இப்போது மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் சீருடைக்கான இந்த வண்ணக் கலவையை வங்காளத்தின் நிறம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்போது அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்து சிலர் கருத்துக்களை கூறி வந்தாலும், சிலர் இது அரசியல் ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது என்று கூறி வருகின்றனர். சில பள்ளிகளும் இந்த முடிவுக்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன.