தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு – ராமதாஸ் வலியுறுத்தல்!
பஞ்சாப் அரசு கடன் சுமையிலும் 25,000 பேருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்திருக்கும் நிலையில், தமிழக பொருளாதார சூழலுக்கு 1 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 லட்சம் பேருக்கு அரசு வேலை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையாக, மு.க.ஸ்டாலின் அவர்கள் ” திமுக ஆட்சிக்கு வந்தால், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஒரே நாளில் ஆல்யா, சஞ்சீவ் வீட்டில் நடந்த இரண்டு கொண்டாட்டங்கள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
இந்த அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளைஞர்களுக்கு 25,000 அரசு வேலைகள் வழங்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் இன்றைய முக்கிய தேவையாக வேலைவாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து, பஞ்சாப் மாநில அரசு அதை வழங்க முடிவு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத் தேர்தல் முக்கிய வாக்குறுதியாக வைக்கப்பட்டது, படித்த இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் அரசு வேலைவாய்ப்பு வழங்குவதும், அதற்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதும் தான். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக 25,000 அரசு வேலைகள் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
பஞ்சாப் மாநில அரசின் இந்த நடவடிக்கைகளை, தமிழக அரசும் வெளிப்படுத்தி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது தான் தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு ஆகும். வேலை வழங்குவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் பஞ்சாபை விட தமிழக அரசிடம் அதிகமாக உள்ளன. தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறைந்தது 1 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.அதேபோல், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.