தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3000 கோடி செலவு ஏற்படும் அதனால் இதனை தவிர்க்க மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு கடந்த 2003ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை அனைத்து அரசு ஊழியர்களும் எதிர்த்தனர். புதிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு எந்தவித நன்மைகளையும், பண பலன்களையும் அளிக்காது என்று கருதப்படுகிறது. அதனால் அரசு ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ ஆலியா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புது சந்தியா – ரியாவின் பதிலடி பதிவு!
இந்த நிலையில் கடந்த வருட சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தற்போது இவர் ஆட்சிக்கு வந்து 1 வருடம் ஆக உள்ள நிலையில் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. கடந்த 18ம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் அத்தகைய அறிவிப்புகள் இடம் பெறாதது ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு கூடுதலாக ரூ.3000 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.