அனைத்து ரேஷன்அட்டைதாரர்கள் கவனத்திற்கு – பொருட்கள் வாங்க புதிய விதிமுறைகள்!
ரேஷன் அட்டை பயனர்களின் தரநிலை மாற்றம் தொடர்பாக, மாநிலங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தரநிலை பட்டியல் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் பெற தகுதியானவர்களுக்கு மட்டும் பொருட்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய விதிமுறைகள்:
நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு அரசு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளது. இந்த ரேஷன் கார்டுகள் குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5( PHH,PHH – AAY, NPHH,NPHH-S,NPHH-NC) வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளைக் கொண்டு ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கு ரேஷன் அட்டை மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. அதோடு, ரேஷன் அட்டையை முகவரி ஆவணமாகவும் பயன்படுத்தலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!
இந்த நிலையில் அரசு ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் எடுக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகளில் மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த வகையில் புதிய தரநிலையின் வரைவு குறித்து மாநில அரசுகளுடன் பல சுற்றுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. புதிய விதியின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி வருவதாகவும், அதில் பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும் பலர் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்? வலுக்கும் கோரிக்கை!
மேலும் புதிய தரநிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றப்படும். இதனால் எந்த வித குழப்பமும் மோசடியும் இல்லாமல் செயல்முறை வெளிப்படையாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதிய தரநிலை அமலுக்கு வந்தால், மலிவு விலையில் கிடைக்கும் ரேஷன் பொருட்களைப் பெற தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள், தகுதியில்லாதவர்கள் பயன்பெற முடியாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.