தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மார்ச் 16 கடைசி நாள்!
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வினை எழுத போகும் தேர்வர்கள் நாளையில் இருந்து வரும் மார்ச் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துவிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொது தேர்வு:
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதாவது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வரும் மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி நிறைவடைகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன்அட்டைதாரர்கள் கவனத்திற்கு – பொருட்கள் வாங்க புதிய விதிமுறைகள்!
இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விரும்பும் தேர்வர்கள் விண்ணப்பிப்பது குறித்தான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளையில் இருந்து வரும் மார்ச் 16 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று பெற்று கொள்ளலாம். நேரில் செல்ல இயலாதவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியிலும் சென்று பூர்த்தி செய்துகொள்ளலாம்.
TN TRB TET தேர்வு அறிவிப்பு 2022 – தகுதிகள், தேர்வு தேதி & முழு விவரங்களுடன்..
16 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்ய இயலாத தனித்தேர்வர்களுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் மார்ச் 18 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு தேர்வை எழுதப்போகும் தேர்வர்கள் 500 ரூபாய் கட்டணமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.