மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் ஹோலி பண்டிகையையொட்டி, நிலுவையில் உள்ள அகவிலைப்படி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 2022ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மேலும் 3% உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 34% ஆக அதிகரிக்கும்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை – அடுத்து வரப்போகும் திருப்பம்!
இதனால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் ரூ.6,120 வரை கூடுதல் தொகை பெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி தொகையை வழங்க கோரிக்கை எழுந்து வருகிறது. 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையும் ஒரே செட்டில்மெண்டில் வழங்க இருப்பதாகவும் தகவல்களும் வந்துள்ளது. சுமார் 2 லட்சம் ரூபாய் வரை அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வருடம் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவை தொகை, வீட்டு வாடகைப்படி உயர்வு, அடிப்படை சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா” சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இந்த நிலையில் 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை ஹோலி பண்டிகையையொட்டி வழங்கங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இலட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவர். மேலும் fitment factor 2.57இல் இருந்து 3.68 ஆக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து அடிப்படை ஊதியம் 18,000 திலிருந்து 26,000 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.