ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., அமலுக்கு வரும் புதிய நடைமுறை., வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றது . அந்த வகையில் தற்போது ரேஷன் கடை தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் POS கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில கடைகளில் சோதனை அடிப்படையில் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது. இதனால் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் சரியான எடைக்கு பொருட்கள் விற்கப்படுவது உறுதி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


























