‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய கண்ணம்மா வினுஷா யார் தெரியுமா? ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து ரோஷினி விலகியுள்ள நிலையில், புதிய கண்ணம்மாவாக வினுஷா என்ற மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவரை பற்றிய தகவல்கள் அனைத்தும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.
புதிய கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா தொடரில் சமீபத்தில் தான் அகிலன் கதாபாத்திரம் மாற்றப்பட்டது. இதற்கே ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான கண்ணம்மா மற்றும் வெண்பா மாற்றம் செய்யப்பட இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில், கதையின் நாயகியான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி சினிமா வாய்ப்புகள் காரணமாக சீரியலை விட்டு விலகியுள்ளார். இந்த தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் கண்ணம்மா கதாபாத்திரம் தான்.
‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் நமீதா மாரிமுத்து செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
அப்படியிருக்கையில், அவருக்கு பதில் வேறு நடிகை யாரையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பெரும் சந்தேகம் உள்ளது. தற்போது ரோஷினியை போன்ற தோற்றம் கொண்ட வினுஷா தேவி என்ற மாடல் பிரபலத்தை இந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்துள்ளனர். இவரை வைத்து ப்ரோமோ காட்சிகள் படமாக்கப்பட்டு, ஷூட்டிங் துவங்கப்பட்டு விட்டது. 1994-ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி அரக்கோணத்தில் பிறந்த வினுஷா வள்ளியம்மாள் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர், திமிரு படத்தில் வரும் ஸ்ரேயா ரெட்டியின் வில்லத்தனமான டைலாக்கை பேசி டிக் டாகில் பிரபலமானவர். மாடலிங் தொழிலையும் செய்து வந்தார்.
அம்ரிதாவிற்கு குழந்தை இருப்பதை அறிந்து பேரதிர்ச்சியில் எழில், காதலை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
இவர் சன் டிவியில் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்லவோடு இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். கேபிரியல்லா தனக்கு சகோதரி போன்ற நெருக்கமானவர் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவரான வினுஷாவிற்கு பாரதி கண்ணம்மா சீரியல் அறிமுக வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேபிரியல்லா, டிக் டாக் ஃபேம் அக்ஷய் போன்றவர்களுடன் இணைந்து N4 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி கண்ணம்மா தொடரில் மக்களின் ஃபேவரிட் ஆன கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதில் வினுஷா இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.