தமிழக அரசில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப ஊழியர்கள் சங்கம் கோரிக்கை!
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் நாட்டில் அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ஏதும் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. இதனால் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. அண்மையில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தின் பொது அந்தந்த துறை அமைச்சர்கள் அரசு துறையில் புதிய பணியிடங்களை அறிவித்தனர். விரைவில் இவை நிரப்பப்படும் இதன் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சபரிமலை தரிசனம் செல்பவர்களின் கவனத்திற்கு – இன்று கோவில் நடைதிறப்பு!
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வெகு நாட்கள் ஆன பின்னும் இத்துறை அரசு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும் போட்டித்தேர்வுகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை. அரசு துறைகளில் போதிய ஊழியர்கள் இல்லாததால் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும் நிறைய பணிகள் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாணவர்கள் போராட்டம் எதிரொலி!
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14 வது மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட சில முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் வழங்க பட வேண்டும். தமிழக அரசு துறைகளில் உள்ள 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.