சபரிமலை தரிசனம் செல்பவர்களின் கவனத்திற்கு – இன்று கோவில் நடைதிறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை தொடங்கவுள்ளதால் இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா உருமாறி பரவியதன் காரணமாக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாணவர்கள் போராட்டம் எதிரொலி!
தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சபரிமலை நடை இன்று திறக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
CBSE 10, 12ம் வகுப்பு முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு – மாணவர்களின் கவனத்திற்கு!
அதன்படி கார்த்திகை மாத பிறப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து நாளை மண்டல பூஜை தொடங்கவுள்ளது. எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்வது அவசியம். பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. மேலும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவையும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.