CBSE 10, 12ம் வகுப்பு முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு – மாணவர்களின் கவனத்திற்கு!
சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பொது பருவத் தேர்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.
அட்டவணை வெளியீடு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணத்தால் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாநிலங்களில் படிப்படியாக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
நவ.17 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – மாநில முதல்வர் உத்தரவு!
பள்ளிகள் சரியான நேரத்தில் திறக்கப்படாததால் பொதுத் தேர்வுகள் நடைபெறும் மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் பாடங்களை நடத்துவதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. எனவே சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதல் பகுதி தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் 2வது பகுதி தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு – இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு!
இவ்வாறு பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பொது பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி சி.பி.எஸ்.இ படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பொது பருவத்தேர்வானது நவ.30ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.