அம்ரிதாவிற்கு குழந்தை இருப்பதை அறிந்து பேரதிர்ச்சியில் எழில், காதலை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாக்கியலட்சுமி சீரியல்
ஒரு குடும்ப பெண்ணின் பிரச்சனைகள் மற்றும் அதனை எதிர்கொண்டு தனக்கு பிடித்தவற்றை அவர் நிறைவேற்றிக் கொள்வது என்பதனை மிகவும் எதார்த்தமாக எடுத்து காட்டி வருகிறது விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியல். தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டமாக கோபி ராதிகாவை முன்பை விட அதிகமாகவே விரும்புகிறார். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாகவும் தனது நண்பரிடம் கூறுகிறார். ராதிகாவின் அம்மாவிடமும் இது குறித்து பேசுகிறார். இது ஒரு புறம் இருக்க, அம்ரிதாவை காதலிப்பதாக கூற எழில் அவரது வீட்டிற்கு செல்கிறார்.
தமிழ் உயிரை காப்பாற்றும் மூர்த்தி, ஒன்றாக இணையும் இரு சீரியல் குடும்பங்கள் – மெகா சங்கமம் ப்ரோமோ!
ஏற்கனவே அம்ரிதா தனது பிறந்தநாள் அன்று ஒரு எழிலிற்காக ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பதாகவும் கூறி இருக்கிறார். இப்படியான நிலையில், தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எழில் தனது காதலை சொல்வதற்காகவும், அம்ரிதாவின் பிறந்தநாளிற்கு வாழ்த்தவும் அவரது வீட்டிற்கு செல்கிறார். எழில் அம்ரிதாவிற்கு என்று ஒரு பரிசும் வாங்கி கொண்டு செல்கிறார். அங்கே சென்று அம்ரிதாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு பரிசு கொடுக்கிறார். தான் பிறந்தநாள் பரிசாக இன்னொரு சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக எழில் கூறுகிறார். அம்ரிதாவின் அம்மா எழிலிடம் நல்ல முறையில் பேசி விட்டு, எப்போதுமே அம்ரிதா எழில் பற்றி தான் தன்னிடம் அதிகமாக பேசுவார் என்றும் கூறுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகியது இதற்காக தான் – மனம் திறந்த நடிகை ரோஷினி!
இதனை கேட்டு விட்டு எழில் மிகவும் சந்தோசம் அடைகிறார். அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு குழந்தையின் சத்தம் வீட்டிற்குள் கேட்கிறது. அப்போது அமிர்தா கையில் ஒரு பெண் குழந்தையுடன் வருகிறார். இது குறித்து எழில் கேட்டதும் வீட்டினர் அனைவரும் அது அமிர்தாவின் குழந்தை என்று கூறுகின்றனர். இதனை கேட்டு விட்டு எழில் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பின்னர், அம்ரிதா எழிலிடம் இது தான் நான் கூறிய சர்ப்ரைஸ் என்று கூறுகிறார். இதனை கேட்டு விட்டு எழில் கவலையுடன் தனது வீட்டிற்கு செல்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.