‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் நமீதா மாரிமுத்து செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட திருநங்கை நமீதா மாரிமுத்து அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் சில சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
நமீதா மாரிமுத்து
விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிற்பாடு சமூக சேவையில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் திருநங்கை நமீதா மாரிமுத்து. மாடலிங் துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பிடித்திருக்கும் திருநங்கை நமீதா மாரிமுத்து விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாக மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர். பல ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் இந்த ‘பிக்பாஸ்’ போட்டியில் கலந்து கொண்டு வந்த நமீதா இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
அம்ரிதாவிற்கு குழந்தை இருப்பதை அறிந்து பேரதிர்ச்சியில் எழில், காதலை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
அதாவது, உடல் நல குறைபாட்டால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் சிறிது காலம் ஓய்வெடுத்து வந்தார். பொதுவாக சமூக சேவைகளில் மீது அதிகளவு நாட்டம் கொண்ட நமீதா, மீண்டுமாக தன்னுடைய சேவை பணிகளில் இறங்கி இருக்கிறார். அந்த வகையில் முதலாவதாக சாலையோரத்தில் வசித்து வரும் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை கொடுத்து வந்தார். இதனை தொடர்ந்து சென்னையில் கடந்த சில நாட்களாக கொட்டும் மழையிலும் தெருவோர நாய்களுக்கு உணவு வழங்கி இருந்தார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகியது இதற்காக தான் – மனம் திறந்த நடிகை ரோஷினி!
இந்த நிகழ்வுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாக நமீதாவுக்கு ஆதரவுகளும், பாராட்டுகளும் குவிந்து வந்தது. இந்நிலையில் மீண்டுமாக திருநங்கை நமீதா மாரிமுத்து சாலையோர மக்களுக்கு உணவு அளித்து அவர்களுடன் பேசி, சிரித்து சிறிது நேரத்தை செலவிட்டிருக்கிறார். இந்த நிகழ்வும் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் நமீதாவின் சேவைகளை பாராட்டும் விதத்தில் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.