முதுநிலை நீட் தேர்வில் புதிய மாற்றங்கள் – மாணவர்கள் குழப்பம்!!
மருத்துவ மேற்படிப்புக்காக முதுநிலை நீட் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ள நிலையில், தேர்வில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு:
நீட் என்பது தேசிய தகுதி மற்றும் நுழைவு சோதனை. இந்தியாவில் இளங்கலை மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., பி.ஜி., டிப்ளமோ சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வுகளை என்.பி.இ., எனப்படும் தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. 2021ம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வுக்கு மார்ச் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு – ஆசிரியர் கழகம் கோரிக்கை!!
மாற்றங்கள்:
நடப்பு ஆண்டு முதுநிலை நீட் தேர்வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான தேர்வு கட்டணம் ரூ.3,750ல் இருந்து 5,015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 3,835 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 165ல் இருந்து 255 தேர்வு மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்விற்கான கேள்விகள் எந்தெந்த பாடங்களில் இருந்து கேட்கப்படும் என்பது கூட இன்னும் முடிவாகாமல் உள்ளதால் மாணவர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையே உள்ளது. நடப்பு ஆண்டில் மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:30 வரை ஆன்லைன் முறையில் நடைபெறும். ஒரே மதிப்பெண்களை ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் பெற்றால், அவர்களில் தகுதியானவரை தேர்வு செய்யும் நடைமுறைகளும் இம்முறை மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்