தனியார் பள்ளி மாணவிக்கு மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
மருத்துவ சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளி மாணவிக்கு 7.5% இடம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை.
இட ஒதுக்கீடு
மருத்துவப் படிப்புகளுக்காக மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் நீட் நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வில் மத்திய அளவிலான பாடத்திட்டங்கள் இடம் பெற்றிருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். அதிலும் தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக பல குழப்பங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை கருத்தில் கொண்டு அம்மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டது.
தமிழக தேர்தல் பணியில் கூடுதலாக 4,495 போலீசார் – டிஜிபி அறிக்கை!!
இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஷகிலா பானு மருத்துவ சேர்க்கையில் தனக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அம்மாணவிக்கு மருத்துவ படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்