தமிழக தேர்தல் பணியில் கூடுதலாக 4,495 போலீசார் – டிஜிபி அறிக்கை!!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த தேர்தலுக்கான பணிகளில் கூடுதலாக 4,495 போலீசார் ஈடுபட வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு பணி
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வாரம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது. முன்னதாக தேர்தல் பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட 235 கூடுதல் துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். முன்னதாக தேர்தல் பாதுகாப்பு பணிகளில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிகளில் கூடுதலாக 4,495 போலீசார் ஈடுபட வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் – செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு!!
இதன்படி தேர்தல் பணிகளுக்காக சிலை கடத்தல் சிறப்பு பிரிவு போலீசார், சிபிசிஐடி போலீசார், பொருளாதார பிரிவு போலீசார் என பல பிரிவுகளில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தொடர்ந்து தேர்தல் நடக்க உள்ள 6ஆம் தேதியன்று சட்டம் ஒழுங்கு போலீசார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்