CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தாமதம் – ஜேஇஇ, நீட் தேர்வுகள் பாதிப்பு!!
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்படாத நிலையில் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்று குறைந்த நிலையில் மாநிலங்களில் உள்ள பரவல் நிலையைப் பொறுத்து பள்ளிகளை திறக்க அரசுகள் அனுமதியளித்தது. இதனால் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து திறக்கப்பட்டது. மேலும், தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் சிபிஎஸ்இ கல்வி வாரியம் தேர்வுகளை தள்ளி வைத்து அறிவித்தது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!!
பெற்றோர்கள் கருத்து:
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு போன்ற தகுதி தேர்வுகள் தேதியுடன் ஒன்றாக வர வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், “கோவிட் -19 சூழலில் தேர்வுகள் பற்றிய நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. சிபிஎஸ்இ வாரியம் மே 30ம் தேதி வரை தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் தேர்வு நடத்த இருந்தால், அறிவிப்பை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்.
இதனால் நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்கும் நிலை உருவாகலாம். நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டாலும் பொதுத்தேர்வுக்கான முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகலாம். இதனால் மாணவர்களின் பொறியியல், மருத்துவ சேர்க்கை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
அதிகாரிகளின் பதில்:
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறித்து ஐ.ஐ.டி அதிகாரி ஒருவர், “கொரோனா பரவலின் விகிதம் கடந்த மூன்று வாரங்களுக்குள் மிகவும் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் தேர்வுகள் குறித்து உறுதியாக கூற முடியாது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதத்தில் நடப்பதாக இருந்தால் அது ஜூலை 3ம் தேதி அன்று நடக்க இருக்கும் ஜேஇஇ (Advanced) தேர்வின் தேதியோடு ஒன்றாக வர வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்