தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!!
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் மக்கள் தங்கள் பணிகளை தொடங்க ஆரம்பித்தனர். இந்நிலையில் 2021 மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது.
தமிழகத்தில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் – மாணவர் சேர்க்கை பணிகள்!!
இரண்டாம் அலை:
கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 7,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தினமும் பரவலின் எண்ணிக்கை 1000 பேருக்கு மேல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலின் விகிதம் தினமும் 11% அளவில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் அதிவேகத்தில் கொரோனா பரவி வருகிறது.
ஆலோசனை கூட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை செய்லபடுத்தி வருகிறது. மேலும், நோய் கட்டுப்படுத்துவது குறித்து அடுத்த கட்ட ஆலோசனை நாளை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்