நீட் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது ! – உச்சநீதிமன்றம் உத்தரவு

0
நீட் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது ! - உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது ! - உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது ! – உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் நீட் தேர்வானது நாளை (செப் 13) நடைபெறவுள்ள நிலையில், இந்த நீட் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை தற்போது வெளியிட்டு உள்ளது.

நீட் தேர்வு :

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக இந்த தேர்வு பல மொழிகளில் நடைபெறும்,.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் இந்த நீட் தேர்வினை தள்ளி வைக்க கோரி பல வழக்குகள் தொடரப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் இந்த ஆண்டு குறிப்பிட்டபடியே செப் 13 அன்று நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றே தெரிகிறது.

மறுவாய்ப்பு வழங்க முடியாது !!

இந்நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர் இந்த நீட் தேர்வினை தள்ளி வைக்க வேண்டும், இல்லையெனினும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என புதிய வழக்கு ஒன்றினை தொடர்ந்து இருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு சம்பத்தப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கில் குறிப்பிட்ட ஏதுமிலை என்றும், நீட் தேர்வு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதால், மறுவாய்ப்பு வழங்க சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் நாளை (செப் 13) நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!