தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கடும் காய்ச்சல், தொண்டை வலி – ரசிகர்கள் ஷாக்!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நீரஜ் சோப்ரா:
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் 2020 இந்த ஆண்டு நடைபெற்றது. இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் எறிந்து முதல் இடத்தை தட்டிச்சென்றார். இதனை தொடர்ந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய ஈட்டி எறிதல் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நீரஜ் செய்த வரலாற்று சாதனையை இந்தியா முழுவதும் கொண்டாடி வந்தனர்.
CBSE 10, 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!
இந்நிலையில் நீரஜ் சோப்ரா கடுமையான காய்ச்சல், தொண்டை வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ சிகிச்சையில் பெரிதும் மாறுதல்கள் ஏதும் இல்லாத காரணத்தால் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குறையாமல் அவதிப்பட்டு வந்தார். தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதன் காரணமாக கொரோனா தொற்றால் தாக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்களிடையே பெரும் அச்சம் நிலவியது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் நெகட்டிவ் என வந்துள்ளதால் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு காய்ச்சல், தொண்டை வலி குறையாத காரணத்தால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் 100 ஆண்டு கால கனவை நிறைவேற்றிய தங்க மகன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிராத்தனையில் ஈடுபட்டு உள்ளனர்.