நாடு தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு நடவடிக்கை!
அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் பெரு நாட்டில் உள்ள பொது மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வர, இதனை தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டு அரசாங்கம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையானது எதிர்பாராத அளவுக்கு ஏற்றம் கண்டு வருகிறது. சமீப காலமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை துவங்கி எரிவாயு வரைக்கும் விலை உயர்வை கண்டுள்ளது. அந்த வகையில் தென் அமெரிக்காவில் இருக்கக்கூடிய பெரு நாட்டிலும் எரிபொருட்கள் அதிக விலை ஏற்றம் அடைந்துள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து அந்நாட்டு மக்கள் தற்போது வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ford India சென்னை வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அந்த வகையில் இரண்டாவது வாரமாக எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் பெருவியன் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, நாடு முழுவதும் பரவியுள்ள எரிபொருள் மற்றும் உரச் செலவுகளுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதித்து தலைநகர் லிமாவில் ஊரடங்கு உத்தரவை விதித்தார்.
Google நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோரா ? உங்களுக்கான முக்கிய வேலைவாய்ப்பு தகவல்கள் இதோ..!
மேலும் அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல் 5 ஆம் தேதியன்று அதிகாலை 2 மணி முதல் இரவு 11:59 மணி வரை குடிமக்களின் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. இதற்கிடையில் பெரு நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாற இதனால் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தவிர விலைகளைக் குறைக்கும் முயற்சியில் எரிபொருளின் மீதான பெரும்பாலான வரிகளை தவிர்ப்பதற்கும் அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.